மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழு அமைக்க தி.மு.க முடிவு.!

Default Image

வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க தி.மு.க முடிவு எடுத்துள்ளது.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க. நிர்வாகிகள் பொய் வழக்குகள், சட்ட விரோத ஜனநாயக விரோத கைது நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கூட்ட முடிவில், கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்வதில் ஏற்பட்ட தாமதமே கொரோனா அதிகம் பரவ காரணம். கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடாமல் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதா.? என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு சரியாக செய்யவில்லை என குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்நிலையில், வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க தி.மு.க. கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்