மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழு அமைக்க தி.மு.க முடிவு.!

வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க தி.மு.க முடிவு எடுத்துள்ளது.
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க. நிர்வாகிகள் பொய் வழக்குகள், சட்ட விரோத ஜனநாயக விரோத கைது நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கூட்ட முடிவில், கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்வதில் ஏற்பட்ட தாமதமே கொரோனா அதிகம் பரவ காரணம். கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடாமல் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதா.? என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு சரியாக செய்யவில்லை என குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்நிலையில், வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க தி.மு.க. கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024