திமுக-காங்கிரஸ் உறவு  ஒட்ட வைத்தாலும் மறுபடியும் உடையும் – அமைச்சர் ஜெயக்குமார்

Default Image
  • திமுக -காங்கிரஸ் கூட்டணி இடையே  விரிசல் அதிகமானது.
  • திமுக-காங்கிரஸ் உறவு  ஒட்ட வைத்தாலும் மறுபடியும் உடைந்துதான் போகும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிட்டது.முடிவுகள் வந்த பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் அறிக்கையில் , தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.இதன் விளைவாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காங்கிரஸின் முக்கிய கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை.

இதன் பின்னர் ஏற்பட்ட கருத்து மோதல்களால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வந்த  நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார்.இதனையடுத்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில்,  திமுக – காங்கிரஸ் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி பேசியுள்ளோம்.  சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  திமுக, காங்கிரஸ் உறவு உடைந்த கண்ணாடி போன்றது.அதனை ஒட்ட வைத்தாலும் மறுபடியும் உடைந்துதான் போகும் என்று கூறினார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான சட்டத்தை வளைத்து ஒடித்தது திமுக.ஆனால் அதிமுக சட்டத்திற்குட்பட்டு செயல்படுகிறது. கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸை திமுக மோசமாக நடத்தி வருகிறது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்