திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு… தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!

Published by
பாலா கலியமூர்த்தி

DMK: தங்களது செல்போன்கள் ஒட்டுகேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, எனது, என் மனைவி மற்றும் உறவினர்கள், நண்பர்களின் செல்போன்களை தமிழக உளவுத்துறைஒட்டுக்கேட்பதாகவும், என்னை கண்காணிப்பு கோவையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதன்பின் சமீபத்தில் தங்கள் கட்சியினரின் செல்போன்களை தமிழக உளவுத்துறை ஒட்டுக்கேட்பதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்திருந்தது. அதுவும் தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில் வேலவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் இன்பத்துரை வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்த நிலையில் திமுகவினரின் செல்போன்கள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக திமுக சார்பில் ஆர்எஸ் பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், திமுகவினரின் செல்போன்கள் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் சட்டவிரோதமான மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுகேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

24 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

28 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

43 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

55 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago