அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2வது பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆளுநரிடம் அளித்தார்.
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2வது பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் சென்னை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து அளித்துள்ளனர். அதிமுக அமைச்சர்கள் மீது தாங்கள் அளித்துள்ள ஊழல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 5 அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியல் தந்துள்ளோம். அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தனக்கு இருக்கும் அதிகாரத்தின் படி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முக ஸ்டாலின் கொடுத்த ஊழல் பட்டியலை, ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார் என கூறியுள்ளார். 3ம் கட்ட பட்டியல் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, வாய்ப்பு இருக்காது என்றும் அப்போது இந்த அரசு இருக்காது எனவும் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 22ஆம் தேதி 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருந்தது திமுக.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…