இளைஞர்களுடன் குத்துசண்டை போட்ட திமுக வேட்பாளர்…!

Default Image

கே.பி.சங்கர் திருவொற்றியூர், பெரியார் நகரில், குத்துசண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்த  இளைஞர்களுடன் குத்துசண்டை செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் ஒவ்வொரு வேட்பாளரும், ஒவ்வொரு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்கின்றனர்.

அந்த வகையில், திருவொற்றியூர் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் திருவொற்றியூர், பெரியார் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குத்துசண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, கே.பி.சங்கரும் அவர்களுடன் கையுறை அணிந்து கொண்டு குத்துச்சண்டையில் ஈடுபட்டார். கூடியிருந்த மக்கள் கைதட்டி, ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்