தேசிய குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, ஜே.என்.யு மாணவர்கள் மீது தாக்குதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். இதில் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் அனைத்து எதிர்கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, பகுஜன் சமாஜ் ஆகிய காட்சிகள் கலந்துகொள்வதில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக சரத்பவார் கலந்துகொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கூட்டணி கட்சியான திமுக இதில் கலந்துகொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இதுவரை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பெரும்பாலும் திமுக கலந்துகொண்டுள்ளது. அப்படி இருக்க இந்த கூட்டத்தை புறக்கணித்தது ஏன் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே ஏற்பட்ட சிறிய மனக்கசப்பு விஷயங்களே இந்த காங்கிரஸ் கூட்டத்தில் திமுக பங்கேற்காததற்கு கரணம் என சிலர் கூறி வருகின்றனர்.
கவுகாத்தி : ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 இன் 6வது போட்டி…
கவுகாத்தி : ஐபிஎல் 2025-ன் ஆறாவது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.…
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின்…
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…