அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா-அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற 18 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில்  அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருவாய் துறையினர் சம்மன் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்  அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினார்கள், ஆனால் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படவில்லை.

அதேபோல் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும்  என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்