மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்பு சின்னம் அணிய வேண்டும் என்று திமுக தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. சென்னை தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்கு இடையில் தான் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.எனவே டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில்,மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அதிமுக அரசை கண்டித்து கருப்புச் சின்னம் அணிய வேண்டும்.கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. இன்று காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து 5 பேர் வீட்டு வாசலில் 15-நிமிடம் எதிர்ப்பினை பதிவு செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …