தேமுதிக தலைவர் விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல் தவறானது என்று பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிகவில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து பொதுக்குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார்.
செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுதியாக தெரிவித்தார். செயல் தலைவராக பிரேமலதா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் விளக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்பது முற்றிலும் தவறான தகவல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதன்படி, தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர்கள் மாவட்ட அலுவலகங்களில் விருப்பமனு கொடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் துவங்கி உள்ளன.
அதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில், வார்டுகள் வரையறை செய்யப்பட்டு உள்ளன. டிசம்பர் மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…