விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியிலிருந்து விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது.இதில் தற்போதைய நிலவரப்படி,திமுகவானது பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக கட்சியின் பொருளாளர் மற்றும் வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த்,குறைந்த அளவிலான வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
அதாவது,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் 25,323 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.தேமுதிக வேட்பாளர் பிரேமலதா 9902 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.இதற்கிடையே,பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன் 19,533 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…