தேமுதிக வேட்பாளர்கள் சட்டையில் பட்டை நாமத்துடன் வேட்பு மனு தாக்கல்..!

Default Image

திருச்சி மாநகராட்சிஇல போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் சட்டையில் பட்டை நாமத்துடன் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதிலும், குறிப்பாக சுயேச்சை வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில்,  திருச்சி மாநகராட்சி 54, 55 மற்றும்57 வார்டுகளில் களம் காணும் தேமுதிக வேட்பாளர்கள் வெங்கடேசன் செல்வம், அலெக்ஸ் சட்டையில் பட்டை நாமத்துடன் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்