ரயில் பயணிகள் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணத்தின்போது கொண்டு செல்ல வேண்டாம். என தென்னக ரயில்வே துறை மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளது.
தீபாவளி என்றாலே, புத்தாடை, பட்டாசு தான் நம் நினைவில் வந்துவிடுகிறது. அதில் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல, பேருந்து, ரயில் என பொது போக்குவரத்துகளில் பட்டாசு பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த துண்டு பிரசுரங்களை ரயில்வே நிர்வாகம் விநியோகம் செய்து வருகின்றது.
தென்னக ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ ரயில் பயணிகள் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணத்தின்போது கொண்டு செல்ல வேண்டாம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.’ என பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ‘ ரயில் பயணத்தில் பட்டாசு எடுத்துச்செல்ல கூடாது. அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படலாம், ஆதலால் பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே பயணிகளிடம் துண்டு பிரசுரத்தை ரயில்வே ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர். என தென்னக ரயில்வே அதிகாரி விடீயோவில் பதிவிட்டுள்ளார்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…