திருப்பூரில் அதிகபட்சமாக 18 பேருக்கு கொரோனா உறுதி.! சென்னை முதலிடம்.!

Default Image

 இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 78-ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒரு நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதியாகி மொத்த எண்ணிக்கை 208-ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 89 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது. 

இதில் இன்று மட்டுமே அதிகபட்சமாக திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. அடுத்ததாக கரூரில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. அடுத்து மதுரையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. 

மொத்த எண்ணிக்கையில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது.  இன்று ஒரு நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஆதலால், மொத்த எண்ணிக்கை 208-ஆக உள்ளது. அடுத்ததாக கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 126-ஆக உள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்