கடந்த 10-ம் தேதி முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை கழகத்தில் மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் அதிமுகவை பொறுத்தவரை கட்சியை நிர்வகிக்க வசதியாக மொத்தம் 56 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதனிடையே 12 மற்றும் 13-ம் தேதி நடைபெற இருந்த ஆலோசனை கூட்டமானது தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ததால் 15 மற்றும் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே நிறைவு கூட்டத்தில், சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் உள்ளிட்ட 7 மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் விடுபட்ட 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்கள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதால் அதற்கு தயார்படுத்தும் வகையிலும், அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…