Tamilnadu CM MK Stalin - Chennai flood relief 2023 [File Image]
இந்த மாத தொடக்கத்தில், மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளானது. அதிலும், இந்த புயலின் போது, சென்னை பெருமளவில் பாதிப்பை சந்தித்தது. சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது, பல நாட்களாக பார்த்து பார்த்து சேர்ந்த உடைமைகள் எல்லாம் இந்த மழை வெள்ளத்தில் பாதிப்படைந்தது. ஆனால், இன்னும் சில இடங்களில் மழைநீர் வடியாமல் தான் உள்ளது.
இந்த நிலையில், அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!
வெள்ள நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை சென்னை வேளச்சேரியில் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி நிவாரணத் தொகை காண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ள நிவாரண நிதி ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது. இன்று வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட உள்ளது. டோக்கன் பெற்றவர்கள், 17 முதல் 21-ம் தேதி வரை ரேஷன் கடைகளில், டோக்கனில் கொடுத்த தேதி, நேரத்துக்கு சென்று தங்களுக்கான நிவாரண தொகையை பெற்று கொள்ளலாம்.
அரசு, பொதுத்துறை உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால் வங்கிக் கணக்கு விவரத்துடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் குடும்ப அட்டை இல்லாமல் இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் நிவாரணம் பெறலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…
சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…