இன்று முதல் ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருள்களுக்கான டோக்கன் வினியோகம்!

Published by
Rebekal
  • இன்று முதல் கொரோனா நிவாரண நிதி மற்றும்  14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கான டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.
  • ஜூன் 15 ஆம் தேதி நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வினியோகிக்கப்படும் என அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கின் பொழுது என்பது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட போதே நிவாரணமாக ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதன்படி ஏற்கனவே முதல் கட்டமாக 2000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கியுள்ள தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான திட்டத்தை மூன்றாம் தேதி முதல்வர் துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான டோக்கன் இன்று முதல் ஜூன் 14-ம் தேதி வரை வினியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டோக்கன்கள் அனைத்தையும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், ஜூன் 15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நிவாரணம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2.11 கோடி குடும்பத்தினர் தமிழகம் முழுவதிலும் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

11 minutes ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

2 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

3 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

3 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

6 hours ago

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

7 hours ago