Madurai High Court [Image source : The Hindu ]
சுற்று சூழல் மாசு ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நெல்லையில் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய உடனே அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த நபர் தொடர்ந்த அவசர வழக்கில் மாசு ஏற்படுத்தும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி இல்லை என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. தாமிரபரணி ஆறு ஏற்கனவே கடுமையாக மாசடைந்துள்ள நிலையில் இதுபோன்ற சிலைகளை கரைக்க அனுமதிக்க மாட்டோம்.
மனுதாரர் தயாரித்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபட அனுமதிக்கலாம். இருப்பினும், மனுதாரர் தயாரித்துள்ள விநாயகர் சிலைகளை வாங்குவோர், அதனை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் வைத்து வழிபட விநாயகர் சிலை வாங்குபவர்களின் முழு விவரங்களையும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனாதனத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…