சீட் கொடுக்காத அதிருப்தி…சுயேட்சையாக களமிறங்கும் தோப்பு வெங்கடாசலம்!

Default Image

பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தோப்பு வெங்கடாசலம் முடிவு செய்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்பதால் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ள வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் தனக்கு வருகின்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

பெருந்துறை தொகுதி வேட்பாளராக தன்னை அறிவிக்காமல் ஜெயக்குமார் என்பவரை அறிவித்ததால் அதிருப்தி என கூறப்படுகிறது. இன்று பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 -ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றவர் தோப்பு வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்