#BREAKING: மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.!

Published by
murugan

மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளது.

இதையடுத்து, வழக்கறிஞர் எம்.எல்.ஸ் ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில், பொது முடக்க காலத்தில் நான்கு மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால்,  வழக்கத்தைவிட மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

எனவே அதை இரண்டு, இரண்டு மாதங்களாக பிரித்து அதன் அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் விளக்கம் அளித்தது.

அதில், ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்திற்கு உட்பட்டே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று  சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. தனிப்பட்ட நபர்கள் குறைகள் இருப்பின் அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம் என நீதிபதிகள் கூறினர்.

Published by
murugan

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

9 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

17 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago