நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23 -ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
மூவரின் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.ஆனால் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து கொலை தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.விசாரணையை தொடர்ந்து சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யபப்ட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…