நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான சீனியம்மாள் மற்றும் கணவர் திமுகவிலிருந்து நீக்கம்

Default Image

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள  சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23 -ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
மூவரின்  கொலை  சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.ஆனால்  இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை டிஜிபி திரிபாதி  சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து கொலை தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.விசாரணையை தொடர்ந்து  சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் கைது செய்யப்பட்டனர்.கைது  செய்யப்பட்ட பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யபப்ட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்