நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான சீனியம்மாள் மற்றும் கணவர் திமுகவிலிருந்து நீக்கம்

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23 -ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
மூவரின் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.ஆனால் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து கொலை தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.விசாரணையை தொடர்ந்து சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யபப்ட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025