“கட்சிக்கு அவப்பெயர்;திமுகவினர் 7 பேர் நீக்கம்” – பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

Default Image

முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையடுத்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில்,திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர்கள் உடனடியாக ராஜினமா செய்ய வேண்டும் என முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில்,கூட்டணி கட்சிகளுக்கு பதவியை விட்டுக்கொடுக்காமல் இருந்த காரணத்தினால் திமுக நிர்வாகிகள் 7 பேர் கட்சியிலிருந்து  தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சரும்,திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதன்படி,சின்னசேலம் பேரூராட்சி செயலர் செந்தில்குமார்,தருமபுரி மல்லாபுரம் பேரூராட்சி செயலர் உதயகுமார்,ஆனந்த்,ரகுமான் சான்,மோகன்குமார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,தஞ்சை வேப்பத்தூர் பேரூராட்சி திமுக துணைச்செயலாளர் ராமச்சந்திரன்,ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ராஜதுரை உள்ளிட்டோர்களும் கட்சியினர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்