திருவள்ளூர் மாவட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்துள்ள ராமநாதபுரம் கிராமத்தில் லட்சுமி மற்றும் வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு பீரங்கி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக பென்னலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்பொழுது அங்கு இருந்த வெடிகுண்டுகளை பார்த்துவிட்டு, வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
அப்பொழுது, இவை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டுகள் எனவும், ஏற்கனவே கடந்த 1996-ல் ஒரு பீரங்கி குண்டு கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு பீரங்கிக் குண்டுகளையும் வருவாய்த்துறையினர் கும்மிடிப்பூண்டியில் உள்ள வெடிகுண்டுகள் செயலிழக்கும் இடத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் பீரங்கி குண்டு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடத்துவதற்கு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…