கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் ஐந்து அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணியானது கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டமாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் கீழடியில் மட்டுமல்லாமல் கீழடி சுற்றி இருக்கக் கூடிய கொந்தகை, அகரம், மணல் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழி, விலங்குகளின் எலும்புக் கூடுகள், பாசிமணிகள் சங்கு வளையல்கள் என பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஐந்து அடுக்குகள் கொண்ட உறைகிணறு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உறைகிணறு மேலும் சில வகை அடுக்குகள் இருக்கும் என்பதால் அதனை முழுமையாக கண்டறியும் பணியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்த உறை கிணறு இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர், ஆயிரக்கணக்கான பொருட்கள் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருவது தொல்லியல் துறையினர் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். வரும் செப்டம்பர் இறுதியில் இந்த ஆராய்ச்சியானது நிறைவடைய கூடிய நிலையில் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…