அனைத்து துறை அமைச்சர்களும் களத்தில் இருக்கிறார்கள். நகராட்சி துறை அமைச்சர், மின்சாரத்துறை, மருத்துவத்துறை அமைச்சர்கள் களத்தில் இருந்து வேலை செய்து வருகின்றனர். – பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன்.
வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால், சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் புகுந்துள்ளது. இருந்தும், மழைநீர் வடிகால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், மழைநீர் வேகமான வெளியேறி வருகிறது.
மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், அதனை எதிர்கொள்ள முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், ‘ மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும், மனித உயிர் சேதம் இதுவரை 2 பேர் என தகவல் வந்துள்ளது. இன்று கால்நடை இழப்பு இல்லை. மனித உயிர்சேததிற்கு நிவாரண தொகை 4 லட்சம் ரூபாய் உடனடியாக அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.’ எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வடசென்னை தாழ்வான பகுதி. ஆதலால் அங்கு மழைநீர் தேங்கியுள்ளது. அந்த பகுதிகளிலும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து துறை அமைச்சர்களும் களத்தில் இருக்கிறார்கள். நகராட்சி துறை அமைச்சர், மின்சாரத்துறை, மருத்துவத்துறை அமைச்சர்கள் களத்தில் இருந்து வேலை செய்து வருகின்றனர்.
இதுவரை தமிழகம் முழுவதும் இருந்து 138 புகார்கள் வந்துள்ளது. அதில் 68 புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 70 அழைப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.
சென்னையில் மட்டும் 38 புகார்கள் வந்துள்ளது. அதில் 25 புகார்கள் முடிந்துள்ளது. இதுவரை மிக பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. அனைத்தும் முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி மொத்தம் 24 அடியாகும். அதில் 20.64 அடி நிரம்பியுள்ளது. தண்ணீர் தற்போது 116 கனஅடி நீர் வெளியேற்றபட்டு வருகிறது எனவும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…