பேரிடர் நிதி ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்..!

Published by
murugan

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக நிதியமைச்சர் விளக்கம் அளித்தார்.  அதில் தென்மாவட்டங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு உதவ நான் வைத்த கோரிக்கை ஏற்று உடனே அமித்ஷா உதவிகளை செய்தார். தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்பால் நேற்று மாலை வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கிய 42,290 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் ஒன்பது ஹெலிகாப்டர் மூலம் மீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. மீட்பு பணியில் விமானப்படை, கடற்படை மூலம் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. உள்துறை அமைச்சகத்தில் இருந்த இரண்டு கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து அங்குள்ள நிலைமைகளை 24 மணி நேரம் கவனித்து வந்தனர். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 800-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். வெள்ளம் வடிவதற்கு முன்பே மீட்பு பணியில் மத்திய குழு இறங்கியது.

இந்த ஆண்டிற்கான மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய பேரிடர் நிதி 900 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய 900 கோடி தொகையில் முதல் தவணையாக ரூ.450 கோடி கொடுக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது தவணை தொகை தென் மாவட்ட மழைக்கு முன்பாகவே முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 12-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கான இரண்டாவது தவணை நிதி கொடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

Recent Posts

சீமான் வீட்டில் நடந்த சம்பவம்..முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…

2 hours ago

டாட்டா குட்பை…CT தொடரில் நடையை கட்டிய இங்கிலாந்து…தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…

3 hours ago

மாஸ்டர் சாதனையை மர்டர் செய்த குட் பேட் அக்லி! அடுத்த சம்பவம் லோடிங் மாமே…

சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…

3 hours ago

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…

4 hours ago

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…

5 hours ago

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

5 hours ago