வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றமே – ஜி.கே.வாசன்

Default Image

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற சந்தேகம் தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஆட்சிக்கு வந்த திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், தேர்தல் நேரத்தில், வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றத்தையே இந்த அரசு அளித்துள்ளது. விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு கேட்டுக்கொடுக்காத வகையிலேயே நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற சந்தேகம் தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்