இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிரத்தினம் இயக்கத்தில் உருவான செக்க சிவந்த வானம் படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய்என படத்தில் திரையுலக நட்சத்திரங்கள் அதிகமானோர் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளிவந்து நான்கு நாட்களே ஆன நிலையில் உலகம் முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று சென்னை அபிராமபுரத்தில் உள்ள செக்க சிவந்த வானம் படத்தின் இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலில், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக பாலன், தனசேகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டலைத் தொடர்ந்து மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…