#BREAKING: ஜன.20-க்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள்-தமிழக அரசு..!

Default Image

ஜன.20ஆம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் அமைச்சர் பொன்முடி

கொரோனா கால கட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆன்லைனில் தேர்வுகளும் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கல்லூரிகளில் வகுப்புகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகிறது. சமீபத்தில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்தது.

இந்த அறிவிப்பிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆன்லைனில் பாடம் நடத்தினால், ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஜனவரி 20-ஆம் தேதிக்கு பிறகு நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தரப்போடு நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களின் மீதான வழக்கும் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டு நிலைக்கு அரசு இரண்டு மாதம் அவகாசம் அளித்து ஜனவரி 20 க்கு பின் தேர்வு நடைபெற உள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting
upi gst over 2000
Actor Bobby Simha car accident