வேளாண்மை பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை-நாளை முதல் விண்ணப்பம்..!

Published by
murugan

இந்த ஆண்டிற்கான வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டுப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான்கு உறுப்புக் கல்வி நிலையங்களிலும், மூன்று அரசு இணைப்பு கல்வி நிலையங்களிலும் மற்றும் பத்து தனியார் இணைப்பு கல்வி நிலையங்களிலும் பயிற்றுவிக்கப்படுகின்றது. வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான 2021-2022 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை 01.10.2021 அன்று தொடங்கப்படும் என்று முனைவர் மா.கல்யாணசுந்தரம், முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) தெரிவித்தார்.

நடப்புக் கல்வி ஆண்டில் (2021-2022) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வேளாண் பொறியியல் பட்டயப்படிப்பு உறுப்புக் கல்வி நிலையமான குமுளூரில் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. மேலும் தமிழ்நாடு தோட்டக்கலை துறையினால் தளி, மாதவரம் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஆகியவற்றில் நடத்தப்பட்டு வந்த தோட்டக்கலை பட்டயப்படிப்பு இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அரசு இணைப்பு கல்வி நிலையங்களாக அங்கீகாரம் பெற்று மாணவர் சேர்க்கை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் நடப்பு ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://tnau.ac.in/diplomaadmission) உள்ள விண்ணப்பத்தினை இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் விண்ணப்ப படிவம், விண்ணப்பக் கட்டணம் மற்றும் சான்றிதழ்களை பல்கலைக்கழகத்திற்கு தபாலில் அனுப்பத் தேவை இல்லை.

மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களை அறிந்துகொள்ள (https://tnau.ac.in/diplomaadmission) இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு உதவிகரமாக இருக்கும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 0422-6611322, 0422-6611328, 0422-6611345. 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவிச்சேவை எண்களில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

3 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

4 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

5 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

6 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

7 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

8 hours ago