கொரோனா பாதிப்பு காரணமாகா நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக, அரசின் நலதிட்டங்கள் பெற என உரிய காரணங்களோடு வெளியே வருகின்றனர். இத்தனையும் கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.
unknown nodeஇந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதன் படி, திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருக்கும் நபர்களுக்கு குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக பிரிட்ஜ், இரண்டாம் பரிசாக பீரோ, மூன்றாம் பரிசாக குக்கர் வழங்கப்படும் எனவும், மேலும் சமூக விலகலை சரியாக பயன்படுத்திய 108 பேருக்கு சேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளாராம்.