பணமே வரல அப்புறம் எதற்கு ஏ.டி.எம்..?ஆத்திரத்தில் இயந்திரத்தை எட்டி உதைத்து..! கல்லை போட்டு உடைத்த மர்மநபர்

Published by
kavitha
  • ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர்  பணம் வராத நிலையில் ஏ.டி.எம்மை  உதைத்து ,கல்லை தூக்கி வீசி உடைத்த சம்பவக் காட்சிகள் அனைத்தும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • எட்டி உடைத்தவர் சேவுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி தெரியவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் பணம் வராத நிலையில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் எட்டி ஒங்கி ஒரு உதை உதைத்தார் இது மட்டுமல்லாமல் கல்லை தூக்கி வீசி உடைத்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பதிவாகி உள்ளது.

பதிவாகிய சிசிடிவி காட்சிகள்:

வத்தலக்குண்டு – திண்டுக்கல் சாலையில் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அதன் அருகிலேயே வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்களின் பண பரிவர்த்தனைக்காக ஏ.டி.எம் இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம் அறைக்குள் வந்த ஒரு வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்கு முயற்சிக்கிறார்.பணம் வரவில்லை மேலும் பலமுறை முயற்சித்து பார்க்கிறார் இயந்திரத்தில் இருந்து பணம் இம்முறையும் வரவில்லை. ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் ஏ.டி.எம் இயந்திரத்தை தன் காலால் பல முறை ஓங்கி எட்டி உதைக்கிறார். இதன் பின்னரும் ஆத்திரம் அடங்காமல் ஏ.டி.எம்ற்கு அருகில் கிடந்த கல்லை எடுத்து  இயந்திரத்தை நோக்கி வீசி அதனை உடைத்து  விட்டு பின்னர் வெளியேறி உள்ளார்.

இவருக்கு பின்னர் பணம் எடுக்க வந்த வாடிக்கைளார்களும்  இவருடைய ஆத்திரத்தைக் கண்டு அதிர்ச்சியாகினர்.இந்த நிகழ்வுகள் அனைத்தும் காட்சிகளாக சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் இதனை பார்த்த வங்கி மேலாளர் சரண்  இது குறித்து  அளித்த புகாரின் பேரில் வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ் பெக்டர் பிச்சைபாண்டி விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில்  ஏ.டி.எம் மிஷினை காலால் பலமுறை  எட்டி உதைத்தது மட்டுமல்லாமல் அதன் மீது கல்லை போட்டு உடைத்த  ஆத்திரக்காரர் வத்தலகுண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது உள்ளது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Posts

பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!

பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!

டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…

2 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…

4 minutes ago

தமிழ் சினிமாவில் சோகம்! பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…

50 minutes ago

இனி மீன் விலை தாறுமாறு தான்! நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைகாலம்!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…

2 hours ago

நாட்டிலேயே முதல் முறையாக எஸ்.சி பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு., தெலுங்கானா அரசு புதிய அறிவிப்பு!

ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில்…

2 hours ago

ஒரே மேட்சு தான்., கேப்டன் தோனி சொன்ன அந்த வார்த்தை.., கொண்டாடும் ரசிகர்கள்!

ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான  சென்னை…

3 hours ago