திண்டுக்கல் சீனிவாசன் கூறிய சிலிண்டர் விலை.., அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்.., வைரல் வீடியோ..!

Published by
murugan

ஒரு சிலிண்டர் விலை ரூ.4500 முதல் ரூ.5000 வரை என திண்டுக்கல் சீனிவாசன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

வனத்துறை அமைச்சரும், திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதனால், கடந்த 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரத்தில் உளறி வருகிறார்.

இந்நிலையில், தற்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரத்தில் பேசும்  வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் ஒரு சிலிண்டர் ரூ.4500 முதல் ரூ.5000 வரை  எனவும் 6 சிலிண்டர் வருடத்திற்கு இலவசமாக தருவதாக முதலமைச்சர் அறிவித்ததாக கூறினார்.

ஒரு சிலிண்டர் விலை தற்போது ரூ.800 -க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும்  நிலையில் ரூ.5,000 என உளறியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன், திண்டுக்கல் சீனிவாசன் சோலார் அடுப்பு திட்டத்தை பற்றி  பேசியபோது பெட்ரோல் ஊற்றாமல் அடுப்பை பயன்படுத்தலாம் என கூறினர்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் போது பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

5 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

7 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

7 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

8 hours ago