பாமகவிற்கு தொடரும் பின்னடைவு !பாமகவில் இருந்து விலகிய மாநில துணைத்தலைவர் அமமுகவில் இணைந்தார்!

Default Image

பாமகவில் இருந்து விலகிய மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அந்த வகையில் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில்  பா.ஜ.க- பா.ம.க.-தே.மு.தி.க- த.மா.கா- புதிய தமிழகம் – புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றது.மேலும் இந்த கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் மக்களவை தேர்தலில் அதிமுக , பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது,பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது. சமீபத்தில் நடிகர் ரஞ்சித்  நான் பாமகவில் இருந்து விலகுகின்றேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டார்.அவர் கூறுகையில்,  அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பாமகவில் இருந்து விலகிய மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.இது பாமகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்