தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு: அட்டாக் பாண்டி உள்ளிட்டோர் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

Default Image
  • 2007 ஆம் ஆண்டு அழகிரி ஆதரவாளர்கள் தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர்
  • இந்த தாக்குதலில் தினகரன் ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்டனர்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் வாரிசு யார் என கருத்துக் கணிப்பில் வெளியிட்ட தினகரன் அலுவலகத்தின் மீது 2007 ஆம் ஆண்டு தாக்குதல் நடந்தது. அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் தினகரன் அலுவலகத்தில் பணிபுரிந்த முத்துராமலிங்கம், கோபிநாத்,வினோத் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு மதுரை செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் 12 வருடம் கழித்து இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது.

பல்வேறு பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலின் போது கொல்லப்பட்ட ஊழியர்கள் 3 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாயை தமிழக அரசு அடுத்த 3 மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்