அதிமுக.வை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு இன்று தினகரனை நேரில் சென்று சந்தித்து, அவருடன் இணைந்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு சென்று சந்தித்த பிரபு, அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ” மக்கள் ஆதரவு டிடிவி தினகரனுக்கு தான் உள்ளது. இவரை சந்தித்தது எனது தனிப்பட்ட முடிவு. மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் விரைவில் வந்து தினகரனை சந்திப்பர்.” என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் அதிமுக-வில் இருந்து கொண்டு மக்கள் சேவையை சரி வர செய்ய முடியவில்லை என்றும், பணிகளை செய்வதற்கு மாவட்டத்திலேயே பல முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது என்றும் தெரிவித்தார். அதனை அடுத்து, “அமைச்சர்களிடம் பலமுறை புகார் தந்தும் தமது தொகுதி பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தை வழிநடத்த மக்கள் ஆதரவு பெற்ற தினகரன் பின்னால் செல்வதே சிறந்தது” என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…