அதிமுக.வை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு இன்று தினகரனை நேரில் சென்று சந்தித்து, அவருடன் இணைந்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு சென்று சந்தித்த பிரபு, அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ” மக்கள் ஆதரவு டிடிவி தினகரனுக்கு தான் உள்ளது. இவரை சந்தித்தது எனது தனிப்பட்ட முடிவு. மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் விரைவில் வந்து தினகரனை சந்திப்பர்.” என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் அதிமுக-வில் இருந்து கொண்டு மக்கள் சேவையை சரி வர செய்ய முடியவில்லை என்றும், பணிகளை செய்வதற்கு மாவட்டத்திலேயே பல முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது என்றும் தெரிவித்தார். அதனை அடுத்து, “அமைச்சர்களிடம் பலமுறை புகார் தந்தும் தமது தொகுதி பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தை வழிநடத்த மக்கள் ஆதரவு பெற்ற தினகரன் பின்னால் செல்வதே சிறந்தது” என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…