தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது!! தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம்!!உச்சநீதிமன்றம்  தீர்ப்பு

Default Image
  • தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு
  • உச்சநீதிமன்றம்  இடைக்காலத்   தடை
  • தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு
  • தேர்தல் ஆணையம்  பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
  • தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது
  • குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் உச்சநீதிமன்றம்  தீர்ப்பு

டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு:

டில்லி உயர் நீதிமன்றம், டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இதை எதிர்த்து ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.,மதுசூதனன் ஆகியோர் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம்  இடைக்காலத்   தடை:

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  டி.டி.டி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இடைக்காலத்   தடை விதித்தது.

தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு:

Image result for உச்சநீதிமன்றம்

 

பின்  அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையம்   பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு:

இனிவரும் தேர்தல்களில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியுமா என தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது:

Image result for தினகரன் குக்கர்

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில்,டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது.அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது.பொதுப்பட்டியலில் உள்ள சின்னத்தை குறிப்பிட்ட கட்சிக்கு வழங்குவது நடைமுறை அல்ல என்று பதில் அளித்தது.

உச்சநீதிமன்றம் இன்று  தீர்ப்பு:

இந்நிலையில் குக்கர் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று  தீர்ப்பு வழங்கியது. குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் இன்று  காலை  நீதிபதி கன்வில்கர் அமர்வு தீர்ப்பு அளித்தது.

அதில்  டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

மேலும் “இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்