மு.க.ஸ்டாலின் குறித்து இகழ்ந்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து வசைபாடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து புகழ்ந்தும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், பெயரோ, முகவரியோ வெளியிட தெம்பில்லாத தில்லுமுல்லு பேர்வழிகளால் சிலசுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. ஒருபக்கம் எடப்பாடியை புகழும் வாசகங்கள், இன்னொரு பக்கம் என்னை இகழ்ந்தும் வாசகங்கள். என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், விமர்சனம் ஆரோக்கியமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.
முகவரியற்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், தடுக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழித்து வருகிறார்கள். அச்செயலில் ஈடுபட வேண்டாம். ஒட்டுகிறவர்கள் அனைவரையும், பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக ஓட, ஓட விரட்டியடிக்க போகிறார்கள்.
கொரோனாவில் தோல்வி, தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பை காப்பாற்ற, மாநில உரிமைகளை பெற முடியாத கொள்ளை கூட்டம். அர்த்த ராத்திரியில், அநாமதேய சுவரொட்டிகளை ஒட்டும் முயற்சி தொடருமானால், தமிழ் மக்கள் மன்றம் வழங்க போகும் கடும் ஆயுள் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …