“அரியர் மாணவர்களின் அரசனே” முதல்வரை புகழ்ந்து ஈரோட்டில் டிஜிட்டல் பேனர்!

Published by
Rebekal
அரியர் மாணவர்களின் அரசனே என முதல்வரை புகழ்ந்து ஈரோட்டில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்து, சுற்றுலா தலங்கள் என அனைத்து துறைகளும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது தான் அரசு சில தளர்வுகளுடன் மக்களை வெளியே செல்ல அனுமதித்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் படித்து வருகின்றனர். அதிலும் தற்போது கல்லூரியில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பொறியியல், கலை படிப்புகளில் அரியர் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்கள் முதல்வரை சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்னும் கொஞ்சம் மேலே சென்று கொல்லம் பாளையத்தில் “அரியர் மாணவர்களின் அரசனே” என முதல்வரை புகழ்ந்து கூறி பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” எனும் திருக்குறளுடன் நீர் வாழ்க வாழ்க என போட்டு இப்படிக்கு அரியர் மாணவர்கள் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…

5 hours ago

“முதலில் களத்திற்கு வர சொல்லுங்க”..த.வெ.கவை சாடிய அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…

7 hours ago

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

8 hours ago

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…

8 hours ago

இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…

9 hours ago

10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!

டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க  விசாரணை அமைப்பு ஆகும். இந்த…

9 hours ago