“அரியர் மாணவர்களின் அரசனே” முதல்வரை புகழ்ந்து ஈரோட்டில் டிஜிட்டல் பேனர்!

Published by
Rebekal
அரியர் மாணவர்களின் அரசனே என முதல்வரை புகழ்ந்து ஈரோட்டில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்து, சுற்றுலா தலங்கள் என அனைத்து துறைகளும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது தான் அரசு சில தளர்வுகளுடன் மக்களை வெளியே செல்ல அனுமதித்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் படித்து வருகின்றனர். அதிலும் தற்போது கல்லூரியில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பொறியியல், கலை படிப்புகளில் அரியர் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்கள் முதல்வரை சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்னும் கொஞ்சம் மேலே சென்று கொல்லம் பாளையத்தில் “அரியர் மாணவர்களின் அரசனே” என முதல்வரை புகழ்ந்து கூறி பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” எனும் திருக்குறளுடன் நீர் வாழ்க வாழ்க என போட்டு இப்படிக்கு அரியர் மாணவர்கள் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!

“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!

சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…

28 minutes ago

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…

43 minutes ago

SL vs AUS: 2வது ஒருநாள் போட்டி… வானிலை, பிட்ச் ரிப்போர்ட்.! இரு அணி வீரர்கள் விவரம்.!

கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…

58 minutes ago

த.வெ.க விஜய் பற்றிய கேள்வி…”ஐயோ சாமி”.. ஓ.பி.எஸ் கொடுத்த ரியாக்‌ஷன்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…

1 hour ago

“செங்கோட்டையன் விசுவாசமானவர்.. இதை செய்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு” – ஓ.பன்னீர்செல்வம்.!

தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…

2 hours ago

விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’ சந்திப்பு!

சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…

3 hours ago