அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் போராட்டத்தில் ஈடுபட்டார்..!

Published by
Dinasuvadu desk

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன்,  தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகக் கூறியும், தனது இடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாகர்கோவில் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வான நாஞ்சில் முருகேசன், தற்போது அக்கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லை. ஒழுகினசேரியில் இவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்குகிறது. அங்குள்ள பாரை முருகேசன் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு டாஸ்மாக் நேரம் முடிந்த பின் விற்பனை நடந்ததாகவும், போலி மதுவகைகள் விற்றதாகவும் போலீசார் வடசேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், போலீஸ் சீருடை அணிந்த சிலர்தான் வாளியில் மதுவகைகளை உள்ளே கொண்டுசென்றதாகவும், இந்தக் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருப்பதாகவும் முருகேசன் கூறியுள்ளார்.

தன் மீது பொய் வழக்கு தொடர காரணமான டாஸ்மாக் கடை, தனது நிலத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்திய அவர், இன்று கடை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

டாஸ்மாக் நிர்வாகத்துடன் பேசி முடிவெடுப்பதாக ஊழியர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில், முருகேசன் போராட்டத்தை கைவிட்டார். இதையடுத்து ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு கடை திறக்கப்பட்டது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago