அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் போராட்டத்தில் ஈடுபட்டார்..!

Default Image

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன்,  தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகக் கூறியும், தனது இடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாகர்கோவில் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வான நாஞ்சில் முருகேசன், தற்போது அக்கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லை. ஒழுகினசேரியில் இவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்குகிறது. அங்குள்ள பாரை முருகேசன் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு டாஸ்மாக் நேரம் முடிந்த பின் விற்பனை நடந்ததாகவும், போலி மதுவகைகள் விற்றதாகவும் போலீசார் வடசேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், போலீஸ் சீருடை அணிந்த சிலர்தான் வாளியில் மதுவகைகளை உள்ளே கொண்டுசென்றதாகவும், இந்தக் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருப்பதாகவும் முருகேசன் கூறியுள்ளார்.

தன் மீது பொய் வழக்கு தொடர காரணமான டாஸ்மாக் கடை, தனது நிலத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்திய அவர், இன்று கடை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

டாஸ்மாக் நிர்வாகத்துடன் பேசி முடிவெடுப்பதாக ஊழியர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில், முருகேசன் போராட்டத்தை கைவிட்டார். இதையடுத்து ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு கடை திறக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்