அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா.? வானதி சீனிவாசன் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

நேற்று கோவையில் சிட்பி MSME வங்கியின் புதிய கிளை திறப்பு விழா மற்றும் மத்திய அரசு சார்பில் 948 வங்கிகள் மூலம் 3,749 கோடி ரூபாய் அளவில் மெகா கடனுதவி விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து கலந்துகொண்டார். உடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் வந்திருந்தனர்.

இந்த விழாவுக்கு முன்னதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்களான பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் , வரதராஜ் ஆகியோர் சந்தித்து பேசினர். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் நடந்த இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியது.

ஆனால் இந்த சந்திப்பு குறித்து அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன்  கூறுகையில், இது அரசியல் ரீதியிலான சந்திப்பு அல்ல. தொகுதி தொடர்பான பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைத்தோம் என அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

இந்நிலையில், இன்று,  கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்றைய சந்திப்பு மற்றும் சிட்பி வங்கி கிளை திறப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார். அவர் கூறுகையில் , பொள்ளாச்சி ஜெயராமன் அவர் தொகுதி தென்னை விவசாயிகள் பற்றிய கோரிக்கைகளை முன்வைத்தார். அமுல் கந்தசாமி வால்பாறை பகுதி மலைவாழ் மக்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார். அதே போல ஏ.கே.செல்வராஜ் அவரது தொகுதியில் புதிய வங்கி கிளை வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு முன்னர், இவர்கள் மத்திய விவசாயத்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்தபோதும் நான் உடன் இருந்தேன். நேற்று நடந்தது அரசு நிகழ்ச்சி மட்டுமே. அதில் பங்கேற்க மக்கள் பிரதிநிதிகளுக்கு வங்கி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. நானும் நிறைய அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறேன்.

நேற்று கூட்டணி தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. கூட்டணி பற்றி எல்லாம் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என கூறினார். நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் ஆலோசனை கூட்டம் நடந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, தலைவர் இல்லாமல் அமைப்பு செயலாளர் உடன் கூட்டம் நடத்தலாம், ஏதேனும் முக்கியமான விஷயம் நடந்தால் கண்டிப்பாக சொல்வோம் எனவும் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் வானதி சீனிவாசன் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்”… அமைச்சர் ரகுபதி பேச்சு!

சென்னை :  திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…

34 minutes ago

“எங்களுக்குள் ‘டாக்ஸிக்’ போட்டி இல்லை., நாங்கள் நண்பர்கள்.” கில் ஓபன் டாக்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…

1 hour ago

ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய அடி.! சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனுக்கு கேள்வி குறி.?

ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும்…

2 hours ago

“தளபதியை சுத்தி தப்பு நடக்குது., பணம், ஜாதி, ஆனந்த் விஸ்வாசம்.,” த.வெ.க பிரமுகர் பரபரப்பு குற்றசாட்டு?

திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்…

2 hours ago

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பொறியாளருக்கு உயர் பொறுப்பு.! யார் இந்த ஆகாஷ் போப்பா?

அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம்…

2 hours ago

மகா கும்பமேளாவில் புனித நீராடினார் பிரதமர் மோடி!

பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…

3 hours ago