அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா.? வானதி சீனிவாசன் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

நேற்று கோவையில் சிட்பி MSME வங்கியின் புதிய கிளை திறப்பு விழா மற்றும் மத்திய அரசு சார்பில் 948 வங்கிகள் மூலம் 3,749 கோடி ரூபாய் அளவில் மெகா கடனுதவி விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து கலந்துகொண்டார். உடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் வந்திருந்தனர்.

இந்த விழாவுக்கு முன்னதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்களான பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் , வரதராஜ் ஆகியோர் சந்தித்து பேசினர். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் நடந்த இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியது.

ஆனால் இந்த சந்திப்பு குறித்து அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன்  கூறுகையில், இது அரசியல் ரீதியிலான சந்திப்பு அல்ல. தொகுதி தொடர்பான பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைத்தோம் என அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

இந்நிலையில், இன்று,  கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்றைய சந்திப்பு மற்றும் சிட்பி வங்கி கிளை திறப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார். அவர் கூறுகையில் , பொள்ளாச்சி ஜெயராமன் அவர் தொகுதி தென்னை விவசாயிகள் பற்றிய கோரிக்கைகளை முன்வைத்தார். அமுல் கந்தசாமி வால்பாறை பகுதி மலைவாழ் மக்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார். அதே போல ஏ.கே.செல்வராஜ் அவரது தொகுதியில் புதிய வங்கி கிளை வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு முன்னர், இவர்கள் மத்திய விவசாயத்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்தபோதும் நான் உடன் இருந்தேன். நேற்று நடந்தது அரசு நிகழ்ச்சி மட்டுமே. அதில் பங்கேற்க மக்கள் பிரதிநிதிகளுக்கு வங்கி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. நானும் நிறைய அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறேன்.

நேற்று கூட்டணி தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. கூட்டணி பற்றி எல்லாம் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என கூறினார். நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் ஆலோசனை கூட்டம் நடந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, தலைவர் இல்லாமல் அமைப்பு செயலாளர் உடன் கூட்டம் நடத்தலாம், ஏதேனும் முக்கியமான விஷயம் நடந்தால் கண்டிப்பாக சொல்வோம் எனவும் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் வானதி சீனிவாசன் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago