-மத்திய அரசானது வாகன சட்டம் திருத்தம் கொண்டு வந்த பிறகு, போலிசார் அனேக இடங்களில் வாகனச் சோதனையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது பெரும்பாலானோர் உரிய ஆவணங்களை வைத்து தான் வண்டி ஓட்டிக்கொண்டு செல்கின்றனர். முக்கியமாக ஹெல்மெட் போட்டு தான் வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம், ஏரியூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் காவல் நிலைய அதிகாரிகள் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த பள்ளி மாணவன் ஒருவனை உதவி ஆய்வாளர் பிடித்து வைத்து அவனது சைக்கிளுக்கு பூட்டு போட்டு கொண்டு சைக்கிளை ஓரங்கட்டினார். ஒரு மணிநேரமாக காத்திருந்து அச்சிறுவன், தனது சைக்கிளை எடுத்துச் சென்றான். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த மாணவனிடம் உதவி ஆய்வாளர் ஹெல்மெட் அணியாதது பற்றி கேட்டதாகவும், அது குறித்து அவரது வீட்டுக்கு தகவல் தெரிவிக்க சொன்னதாகவும் தகவல் பரவி வருகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…