10ஆம் வகுப்பு மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை! ஆசிரியர்களை வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்!

Published by
மணிகண்டன்
  • தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு 2 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • தகவல் அறிந்து ஊர் மக்கள் திரண்டு ஆசிரியர்களை தாக்கியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் எனும் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்களாக லட்சுமணன் மற்றும் சின்னமுத்து ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு இந்த இரண்டு ஆசிரியர்களும் தொடர்ந்து செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை வீட்டில் சொன்னால் மதிப்பெண் குறைந்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஒருநாள் அந்த ஆசிரியர்கள், மாணவியிடம் எல்லை மீற முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளர்.

தகவல் அறிந்து ஊர் மக்களுடன் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியருடன் பெற்றோர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த ஆசிரியர்கள் மது போதையில் இருந்துள்ளனர். பின்னர் தலைமை ஆசிரியரிடம் இச்சம்பவம் குறித்தும் பலனளிக்காத காரணத்தால், இரண்டு ஆசிரியர்களையும் ஊர் மக்கள் தாக்கியுள்ளனர். தகவலறிந்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்து அவர்களிடம் உள்ள செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மாணவி பென்னகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், விசாரணைக்காக மாணவி அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டு ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்
Tags: Dharmapuri

Recent Posts

தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….

தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில்,  டோமலபெண்டா…

42 seconds ago

“விஜய் கட்சி ஆரம்பத்ததில் இருந்து..,” விலகல்கள் குறித்து விளக்கம் அளித்த சீமான்!

சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…

51 minutes ago

வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…

52 minutes ago

இலங்கை கடற்படை சிறைபிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.!

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…

1 hour ago

LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!

சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…

2 hours ago

இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!

கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…

2 hours ago