மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக பாஜக நிர்வாகிகள் மீது காங்கிரஸ் புகார்.
மதம் மாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தான் அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தமிழக பாஜக தலைவர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மாணவி தற்கொலைக்கு நீதி வேண்டும் என்பது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வரும் நிலையில், அவர் மதக்கலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலையில் மதப்பரப்புரை புகார் எதுவும் இல்லை என பள்ளி மற்றும் பிற மாணவர்களிடம் விசாரணை நடத்திய பின்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை மூலம் தெரிவித்திருத்தனர். மதரீதியான பிரச்சாரங்கள் தலைமை ஆசிரியர்களாலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை என கூறினர்.
குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்துவ மாணவர்களை விட இந்து மாணவர்களே அதிகளவில் கல்வி பயில்கின்றன என்றும் விளக்கமளித்திருந்தனர். இந்த நிலையில், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் குஷ்பு, எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…