பொதுமக்களின் போராட்டத்தை சமாதானம் மூலம் தீர்த்து வையுங்கள்… சீர்மிகு காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சுற்றறிக்கை..

Default Image

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது  நடந்து வருகிறது. இதில், தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மானியக்கோரிக்கையின் போது  காவல்துரைய்யின் மீதான அதிருப்தியை இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் பேச உள்ளனர்.இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கன்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பொதுமக்கள் எவ்வித போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரச்னையை பெரிதாக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜாதி, மத ரீதியான மோதல்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,  காவல் நிலையங்களில் நடக்கும், இறப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும். இதற்காக, குற்றவாளிகள், குற்றம் சாட்டப்படும் நபர்களிடம், பகல் நேரங்களில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும். விசாரணைக்கு பின் அவர்களை, காவல் நிலையங்களில் இரவு நேரத்தில் தங்க வைக்கக் கூடாது என்றும், குறிப்பாக, பெண் கைதிகளை  கண்டிப்பாக காவல் நிலையங்களில் தங்க வைக்கக் கூடாது என்றும். இந்நிலை ஏற்பட்டால்,இது குறித்து உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று  அதில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்