திருவண்ணாமலைக்கு வெளியூர் பக்தர்கள் வரத் தடை..!

Due to the corona, foreign devotees and foreign vehicles have been banned from attending the fire festival.

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தீப திருவிழா நடைபெறுகிறது. கொரோனா காரணமாக தீபத்திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 நாட்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையை சுற்றி 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.