இன்று முதல் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி..!

Default Image

இன்று முதல் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று உயர் அதிகாரிகரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேகொண்டார்.

ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த  நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்