திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி.! அடுத்தடுத்த நிகழ்வுகள்…

Published by
மணிகண்டன்

திருச்சி விமான நிலையமானது தற்போது 60,723 மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக தற்போது விரிவாக்கம் செய்ப்பட்டுள்ளது. இந்த புதிய விரிவாக்கம் செய்ப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று திருச்சி வந்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தற்போது திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கு அவருக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். அதன் பிறகு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு மூவரும் செல்கின்றனர். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதிவு உயர்வு… தமிழ்நாடு அரசு உத்தரவு!

அதன் பிறகு, ரூ.1,200 கோடியில் மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ள திருச்சி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த புதிய விமான நிலையம் மூலம் வருடத்திற்க்கு 44 லட்சம் பயணிகள் பயனடைய உள்ளனர். அதன் பின்னர், ரூ.19,850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். அதே போல முடிவுற்ற திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி இன்று கலந்துகொள்ளும் நலத்திட்ட விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Recent Posts

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

39 minutes ago

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

1 hour ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

2 hours ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

2 hours ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

3 hours ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

3 hours ago