“பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே துணை முதல்வர் பெயர் இருக்கும்!” – அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

துணை முதல்வர் பெயர் இடம்பெறாதது எந்த உள்நோக்கம் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என ஆக்டொபர் மாதம் 7 ஆம் தேதி அறிவிப்பதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார். அதனைதொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிக்குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்லாமல், தனது ஆதவாரர்களுடன் அவரின் வீட்டில் ஆலோசனை நடத்தினார். மேலும் இன்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதற்கான அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. இதனைதொடர்ந்து பலரும் பல கருத்தைகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே துணை முதல்வர் பெயர் இருக்குமெனவும், இது மண்டல அளவிலான நிகழ்ச்சி என்பதால் அவரின் பெயர் பத்திரிகையில் இல்லையெனவும், இதில் எந்த உள்நோக்கம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
4 indian cardinals
UPSC CSE 2024
Madras High Court - TamilNadu
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai